குளமங்கலம்(English:Kulamangalam) கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி தாலுக்காவிலுள்ள மிக சிறப்பு மிக்க கிராமம் ஆகும். குளமங்கலம் என்ற கிராமம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு குளமங்கலம்,
தெற்கு குளமங்கலம்.
இக்கிராமத்தின் மையப் பகுதியில் மிக பழமை வாய்ந்த மிகப்பெரிய குதிரை சிலையுடன் கூடிய பெருங்கரையடி மீண்ட அய்யனார் ஆலயம் உள்ளது. இக்குதிரைச் சிலை ஆசியாவில் மிக உயரமான குதிரை என வர்ணிக்கப்பட்டுள்ளது